About Me

My photo
நான் பேசுவதும் எழுதுவதும் செய்வதும் தான் நான்

Wednesday 28 July 2010

புரட்சிகர வாய்சொல்!!!

நக்சல் பிரிவின் கிளை அமைப்பான தீவிர இடதுசாரி அமைப்பாக தங்களை காட்டிக்கொள்ளும் ம.க.இ.க தனது அன்றாட அரசியல் நிகழ்சி நிரலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யை அவதூறு செய்வதை ஒரு முக்கிய திட்டமாக கொண்டுள்ளது.

அதற்கு அவ்வமைப்பு சி.பி.எம்மின் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து அவதூறு பரப்புகிறது.சி.பி.எம்மின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளான ஜனநாயக அரசியல் செயல்பாடு, வர்க்க வெகுஜன இயக்கங்களில் மக்களை திரட்டுவது, தற்காலிகமானதும் உடனடியானதுமான அரசியல் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மத ஜாதி அமைப்புகளுக்கெதிராக நேரடி தாக்குதல் நடத்தாமலிருப்பது போன்றவைகளையும்,

நாடாளுமன்ற பங்கேற்பு, மாநில அரசுகளை தலைமை ஏற்று நடத்துவது அவ்வரசுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களை தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு வசதி செய்து கொடுப்பது போன்ற பொருளாதார கொள்கைகளையும் ம.க.இ.க தங்கள் வசதிக்கேற்ப வளைத்தும் திரித்தும் பிரச்சாரம் செய்து சி.பி.எம்மை "ஓட்டுபொறுக்கிகள்" "போலி கம்யூனிஸ்ட்கள்" என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை பரிசீலித்தோமானால் எதுவுமே உண்மை இல்லை என்பதும், அனைத்து குற்றச்சாட்டுகளும் யதார்த்த நிலைமைகளை உள்வாங்காமல் மேம்போக்காக ஆனால் தீவிர மன எழுச்சியின் காரணமாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு என்பதை உணர முடியும்.

நாடாளுமன்ற பங்கேற்பு:

இந்தியாவில் ஒப்பீட்டளவில் வலுவான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு நிலவுகிறது என்பதையும் தேர்தல்களில் மக்கள் பெருவாரியாக பங்களிப்பு செய்து தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன் படுத்துகிறார்கள் என்பதையும் தீவிர இடது சாரி வேடமிடும் அமைப்புகள் காண மறுக்கின்றன. இந்தியாவில் மக்கள் பல்வேறுபட்ட பண்பாட்டு கலாச்சார தளைகளுக்குள் ஆழ்ந்து கிடப்பதுடன் ஆழமான ஜாதி கட்டமைப்பில் சிக்குண்டு மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

இவற்றிலிருந்து விடுபட வேண்டுமெனில் நிலப்பிரபுத்துவத்தை உடைத்து நிலச்சீர்திருத்தம் செய்வது முக்கியமான கடமையாகும் என்பதை உணர மறுக்கிறார்கள்.ஒரு சோஷலிச அமைப்பில் செய்யமுடிகிற கடவுள்மறுப்பு ஜாதி ஒழிப்பு போன்றவைகளை முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் செய்ய வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்கள் இந்த தீவிர இடதுசாரி வேடதாரிகள்.

நாடாளுமன்றத்தை பன்றித்தொழுவம் என்று தோழர்.லெனின் குறிப்பிட்டதை கெட்டியாக பிடித்துக்கொண்டு நாடாளுமன்ற பங்களிப்பை புறம்தள்ளி, ஆயுத போராட்டத்திற்கு உடனடியாக மக்களை திரட்ட வேண்டுமென்றும் கிராமங்களிலிருந்து புரட்சி செய்து நகரங்களை நோக்கி வந்து அரசை கைப்பற்ற வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் மக்கள் வர்கங்களாக பிரிந்து இயங்காத நிலைமையில், மூட நம்பிக்கைகளில் முடங்கி விதியை நம்பும் சூழலில் எப்படி மக்களை ஆயுத போராட்டத்திற்கு திரட்டுவது என்பது பற்றி வினா எழுப்பினால் அதற்கு பதிலில்லை.

நாடாளுமன்ற அமைப்பை நம்பி அதன் மூலம் முதலாளித்துவ அரசு கொடுக்கும் சில சலுகைகளை பெற்று வாழ்க்கையை ஓட்டும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் வரட்டுத்தனமான சித்தாந்த மற்றும் தத்துவார்த்த மேற்கோள்களை கேட்டு எதுவுமே புரிபடாமல் அஞ்சி நடுங்கி ஒதுங்கியே நிற்கிறார்கள்.

மத தீவிரவாதிகள் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் காலகட்டத்தில் இந்த தீவிர இடதுசாரி வேடதாரிகள் தங்கள் பிரச்சாரங்கள் மூலம் மக்களை மத தீவிரவாத அமைப்புகளில் சென்று தஞ்சமடையும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.

ஹிந்து மத நம்பிக்கை கொண்ட சாதாரண ஜனங்களை ஆர்.எஸ்.எஸ் ஐ விட்டு வராமல் செய்கின்ற அளவு அவர்களின் கடவுள் மத நம்பிக்கைகளை கொச்சை படுத்தியும் கேவலப்படுத்தியும் இயக்கம் நடத்துகிறார்கள்.

இதன் மூலம் ஜனநாயக எண்ணம் கொண்ட இந்துக்களை தீவிர இந்துத்துவா அமைப்புகளுக்குள் தள்ளிவிடும் வேலையை செய்து ஏகாதிபத்திய தாசர்களாக மாறி இருக்கிறார்கள்.

பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் தான் மற்ற மக்களுக்கு வேலை கல்வி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்துக்கு இவர்கள் ஆதரவானவர்களாக இருக்கிறார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தை கைப்பற்றும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதிகள் வளர்ந்திருக்கிறார்கள், இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்ற அமைப்பை பயன்படுத்தி யதார்த்தமான மக்கள் பிரச்சனைகளை பிரச்சாரங்கள், போராட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்வதை தவிர வேறு மாற்றுவழி இன்று இல்லை.

ஏனெனில் புரட்சிகர இயக்கங்களின் வலிமை என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் வலிமையுடன் ஒப்பு நோக்கினால் மிகவும் வலுவற்றதாகவே இருக்கிறது. ஆயுத போராட்ட அனுபவம் என்பது இந்தியாவில் ஏற்கனவே உண்டு. தெலுங்கான போராட்டம் எப்படி ஒடுக்கப்பட்டது அரசு பயங்கர வாதம் எப்படி புரட்சிகர அமைப்புகளை நசுக்கியது என்பதை நாம் மறக்க முடியாது.

இந்தியாவில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதற்கு ரன்வீர்சேனா,சல்வாஜுடும்,ஆனந்த மார்க்கம், ராமசேனா, பஜ்ரங்க்தள் போன்ற ஆயுதம் தாங்கிய அமைப்புகளை நிலப்பிரபுக்களும், வகுப்புவாதிகளும் அவர்களின் மாநில அரசுகளும் ஏற்படுத்தி அப்பாவிமக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

ஒரிசாவில் விஸ்வஹிந்து பரிசத்தின் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் சுட்டுகொன்றதை அடுத்து காண்டமால் மாவட்டத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வகுப்புவாத கும்பல் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்தும், அவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை தீக்கிரையாக்கி அம்மக்களை அகதிகளாக்கியும், கன்யாஸ்திரீகள் உட்பட பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் கலவரக்காடாக்கிய கொடுமை நிகழ்ந்தது.


இவர்கள் எதிரிகளில் ஒருவரை தாக்கும் பொது எதிரிகளின் தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கானோர் ஆட்படுத்தப் படுகிறார்கள். இதுதான் இவர்களின் ஆயுத புரட்சியின் (அ) ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் பலனாக சாதாரணமக்களுக்கு கிடைப்பது. இது பீகார், சத்தீஸ்கட், ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் காணக்கிடைக்கிறது.

ஆனால் சி.பி.எம் தொடர்சியான ஜனநாயக இயக்கங்கள் மூலம் மக்களை திரட்டி போராடுவதனால் ஏழை மக்களின் வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சில பல நிவாரணங்கள் ஏற்படுத்த முடிந்ததோடு இடதுசாரி அமைப்புகளின் பால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடிந்துள்ளது.

மேலும் இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் தொடர்சியாக ஆட்சியிலிருப்பதுடன் கேரளாவிலும் ஆட்சியை பிடிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான்,பீகார்,பஞ்சாப்,ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தவிற்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ளது.

கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்கையை உத்தரவாத படுத்தும் விதமாக இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவு மக்கள் நல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது.

இந்தியாவை போன்ற அரை நில பிரபுத்துவ அரசமைப்பு கொண்ட தேசத்தில் விவசாய வளர்சியில் ஒரு மாநில அரசு செய்ய முடிகிற பணிகளில் எண்பது சதவீத பணிகளை நிலச்சீர்திருத்தம், பென்ஷன் திட்டம் உட்பட செய்து முடித்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளிகளின் வாழ்க்கை பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

மத்திய அரசாங்கம் மாநில இடதுசாரி கூட்டணி அசாங்கங்க்களை முடக்கி செயலிழக்க வைக்கும் விதமாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் துவங்க உதவ மறுப்பது , மாநில அரசின் திட்டங்களை முடக்குவது போன்ற மக்கள்விரோத செயல்களில் ஈடுபடுகிறது.

உலகமயமாதல் அமலுக்குவந்தது அதன் காரணமாக தனியார்மயமாதலும், வேலையில்லா திண்டாட்டமும், சமூக பாதுகாப்பற்ற  வேலை சூழலும் உருவானது. இன்னொருபுறம் மாநில அரசாங்கங்கள் தனியார் உதவியுடன்  தொழில் தொடங்கும் உரிமம் பெற்றது, லைசன்ஸ் முறை ரத்து செய்யபட்டது போன்ற சில நன்மைகளும் ஏற்பட்டன.

இதனை பயன்படுத்தி தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடதுசாரி மாநில அரசுகளும் ஏற்படலாயின. இம்முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், மக்கள் விரோத ஊடகங்களும் செய்துவருகின்றன. இவர்களுடன் தீவிர இடதுசாரிகளாக தங்களை காட்டி கொள்ளும் நக்சல் மாவோவாதிகளும்  இணைந்து அக்கிரமங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

தமிழகத்திலுள்ள ம.க.இ.க வும் சி.பி.எம் முக்கெதிராக பொய்பிரச்சாரத்தில் பிற்போக்கு வாதிகளுடன் இணைந்து அவதூறு பரப்பி வருகிறது.

தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகிய செல்லப்பெயர்களில்  மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய செய்வது, மக்கள் நல திட்டங்களிலிருந்து அரசின் பங்களிப்பை இல்லாமல் செய்வது, பெரும் பணக்காரர்களை  வாழவைக்கும் திட்டங்களை கொண்டுவருவது போன்ற பணிகளை செய்துவருகிறது.

 ஆனால் இடதுசாரி கூட்டணி மாநில அரசாங்கங்கள் பொதுத்துறையை பாதுகாத்துக்கொண்டும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டுமே தனியார் முதலீட்டை தங்கள் மாநலங்களில் ஊக்கப்படுத்துகின்றன. வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதில் அத்தொழில் நுட்பம் இந்தியாவில் இல்லை என்கிற நிலையில் தவிர்க்க முடியாத கட்டத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்பதை கொள்கையாக கொண்டுள்ளன.

சி.பி.எம் தனது பத்தொன்பதாவது அகில இந்திய  மாநாட்டில் இப்பிரச்சனைகள் குறித்து சரியான கொள்கை விளக்கத்தை விவாதித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தொழில் வளர்சிக்காக பொதுத்துறை, உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களை அரசுகள் நாடின.

இதன் ஒருகட்டமாக மேற்குவங்க மாநிலத்திலுள்ள நந்திகிராமில் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியை மாநில அரசு செய்தது, நிலத்துக்கு ச்சொந்தமானவர்களுக்கு வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இந்தியாவில் எந்த மாநில அரசும் இதுவரை அறிவித்திராத மறுவாழ்வுத்திட்டங்களையும் அறிவித்தது. ஆனால் திரணமூல்  காங்கிரசின் மறைமுக ஆயுத, பண உதவியுடன்  நக்ஸல்வாதிகள்   மக்களில் சிலரை தூண்டிவிட்டு குழப்பம் விளைவித்தனர். அதன் காரணமாக தவறான வழிகாட்டுதலுக்குள்ளான மக்கள் அரசின் திட்டத்திற்கெதிராக திரண்டனர். உடனே மாநில அரசு மறுபரிசீலனை செய்து மக்களுக்கு விருப்பமில்லாத எந்த திட்டமும் கட்டாயப்படுத்தி அமுல் படுத்த படாது என அறிவித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்திவைத்தது.

ஆனால் இப்பிரச்சனையை கையிலெடுத்துக் கொண்ட திரனமூல் காங்கிரஸ் நக்சல்கள் மற்றும்  இந்து,முஸ்லிம் வகுப்புவாதிகளை சேர்த்து  போராட்ட அறிவிப்புகள் செய்ததோடு  மாநில அரசை நிலைகுலைய செய்யும் விதமாக வதந்திகள் பரப்பி மக்களை தூண்டிவிட்டு அச்சமூட்டி வந்தனர். சிலமாதங்கள் கழித்து மிட்னாபூர் மாவட்டத்தையே கலவரக்காடக மாற்றியதோடு மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அம்மாவடத்தை துண்டித்து  சி.பி.எம் தோழர்களை படுகொலை செய்தும், சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை தகர்த்தும் அக்கிரமச்  செயல்களில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விதமாக காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு நடவடிக்கையில் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அவதூறுபரப்பும் நோக்குடன் தமிழகத்தில் ம.க.இ.க இணையத்தில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆனால் மக்கள் மத்தியில் உண்மையை விளக்கி சி.பி.எம் அதனை முறியடித்தது.

அதை போல சிங்கூரில் டாட்டா தொடங்க இருந்த இந்தியாவிலேயே மிக குறைந்த விலை காரான நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியையும் பிற்போக்குவாதிகள் தடுத்ததுடன், அரசு முயற்சியை கைவிட்டது. இன்றைக்கு அத்தொழிற்சாலை குஜராத்தில் செயல்படுகிறது.

இடதுசாரி அரசுகள் நிலையானதும் தூய்மையானதுமான ஆட்சியை வழங்கிவருகின்றன, எந்த  ஊழல் குற்றசாட்டும் சுமத்தமுடியாமல் பிற்போக்காளர்களை தோற்கடித்து வந்த ஆட்சியினை கவிழ்க்க மக்களை தூண்டி விட்டனர்.

இடதுசாரிகள் தொழிற்சங்கம் அமைத்து போராட்டம் நடத்தி தொழில வளர்சியை முறியடிப்பார்கள் என்று பிரச்சாரம் செய்துவந்த முதலாளித்துவ கட்சிகளும், அவற்றின் ஊதுகுழல்களான ஊடகங்களும் தங்கள் முகமூடி மக்கள் முன் அவிழும் என்கிற நிலை வந்ததும் அவர்களே தொழில் மூலதன திட்டங்களை முடக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.

Tuesday 3 March 2009

புரட்சிகர ஒப்பாரி ! ! !

புரட்சிகர வாய்சொல்!

இது லெனின் குறிப்பிடும் வார்த்தை , தமிழகத்தை பொறுத்தவரை ம.க.இ.க. வுக்கு நூறு சதவீதம் பொருந்தக்கூடிய சொல்லாடல்.
புரட்சிகர ஒப்பாரி

சமிபத்திய சில சம்பவங்களை எடுத்து கொண்டு நாம் இதனை விவாதத்துக்குட்படுத்தலாம்.

இந்தியாவில் தங்களை விட்டால்வேறு யாராலும் புரட்சி செய்ய முடியாது, புரட்சிகர இயக்கத்தின் மாதிரி என்றால் அது தாங்கள் தான் எனக்கூறி நக்சல் அமைப்பாக தங்களை கட்டிக்கொள்ளும் ம.க.இ.க ஈழப்பிரச்சனையில் தங்களின் புரட்சிகர முகமூடி கிழிபட்டு ஆள்கூட்ட அரசியல் கோமாளிகளாக அம்மணமாக நிற்க்கிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் எந்த களப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக தகவல் இல்லை. ஆனால் தனது மனதுக்குள்ளாலேயே மிகக்கடுமையான போராட்டங்களை நடத்தி மனதொடிந்து இறுதிக்களம் கண்டு மாண்டு போனார்.

அவரது அரசியல் என்பது தமிழ் தேசிய அரசியல் தான். அதை உறுதி செய்யும் தனி தமிழ் தேச கோரிக்கையுடன் ஏகாதிபத்திய தாசனாக தன்னை காட்டி கொண்டு புலிபயங்கரவாதத்தை ஆதரித்ததுமான கொள்கை அறிக்கை கொண்ட இறுதிக்கடிதம் மிகவும் பிற்போக்கானது.

மட்டுமல்ல அரசியலை நம்பாதீர் மாணவர்களே வழக்கறிஞர்களே தொடர்ந்து போராடுங்கள் கையறு நிலையில் தமிழ்தேசியத்திற்கு பிரபாகரன் போன்றதொரு தலைவன் கிடைப்பான் அப்போது வெற்றிபெறலாம் தற்சமயம் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற கேட்டு நான் உயிராயுதம் ஏந்துகிறேன் எனது பிணத்தை கைப்பற்றி ஒரு கருவியாக வைத்து போராடுங்கள் நான்
எழுதியுள்ள இறுதி கடிதத்தை நகலாயுதம் ஆக்குங்கள் என்கிறார்.

புலி அரசியலை புறக்கணிக்கும் மடையர்கள் கலை இலக்கிய கழகத்தினர்(ம.க.இ.க) ஈழப்பிரச்சனைக்கு பாட்டாளிவர்க்க தீர்வை முன்வைப்பவர்கள். இந்தியாவில் புரட்சியை ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் நடத்த திட்ட மிட்டுள்ள இவர்கள், தமிழ் தேசியத்தை அங்கிகரிக்காதவர்கள். தனித்தனியாக தேசிய இனங்கள் புரட்சி செய்ய முடி யாது என கூறு பவர்கள். எந்த அடிப்படையில் முத்துகுமாரின் இறுதி யாத்திரையை முன் நின்று நடத்தினார்கள் என்பது கேள்வியாகவே இருக்கிறது. முத்துகுமார் முன்வைத்த எந்த கோரிக்கையை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதும் விடை காணமுடியாத ஒன்று.

ஆனால் இந்த மடையர்கள் கலை இலக்கிய கழகத்தினர் கம்யூனிச போர்வைக்குள் இருக்கும் இனவாதிகள் என்பதை இந்நிகழ்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் எல்லோரையும் மோசமானவர்களாக சித்தரித்துவிட்டு செத்துப்போன முத்துக்குமாரை தங்களின் கொள்கை பிம்பமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ம.க.இ.க வின் கம்யூனிச அரிச்சுவடி என்பது அனைத்தையும் நிராகரிப்பது என்பதிலிருந்து முற்றி தங்களையே நிராகரிப்பது என்கிற விளிம்பு நிலை அரசியல் ஆகிவிட்டது என்பதை அவர்களின் விமர்சனங்களை கவனித்து வருபவர்களால் உணர முடியும். இந்த வீழ்ச்சியே அவர்களை பிணவாத அரசியலுக்குள் தள்ளி ஆள்கூட்ட அரசியல் கோமாளிகளாக ஆக்கி விட்டுள்ளது.

முத்துக்குமாரின் மரணமும் அதனை தொடர்ந்து வந்த நாட்களில் தமிழ்கத்தில் ஏற்பட்ட எழுச்சியையும் அரசியல் ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் புரிந்து கொள்ள முடியாமல் எல்லாம் தாங்கள் நினைத்ததை போல் நிகழ போகிறது, ஆயுத புரட்சிக்கு தயாராகி விட்டது என்ற முடிவுக்கு இக்கும்பல் வந்து விட்டதோ என்னவோ?

ஆனால் ம.க.இ.க வின் ஆதரவாளரான முன்னாள் விடுதலை புலி ரயாகரன் அவர்கள் சரியான விதத்தில் அந்த தற்கொலையை விமர்சித்து பதிவிட்டார். அரசியலற்ற வரின் மனச்சிதைவே இத்தற்கொலை என்றும் மனநல வைத்தியம் பார்த்திருந்தால் அது நிகழ்ந்திருக்காது என்றும் கூறினார்.சர்வதேசியம் பேசுபவர்கள் இப்படி செய்யலாமா என்று ம.க.இ.கவை வினவினார்.

ஆனால் ம.க.இ.க வின் "வினவு" என்கிற "வசவு" வார்த்தைகளை பயன்படுத்தி புரட்சி விதை தூவும் ஆன்லைன் போராளியும் அவரை போன்றவர்களும் தங்களது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள தயாராகாத நிலையில் "ரயாகரன்" தானிமை பட்டு விடுவோமோ என்கிற தவிப்பிலோ என்னமோ அந்த கும்பலுடன் சேர்ந்து கும்மியடிக்க தொடங்கி விட்டார்.

தனது "தமிழரங்கம்" வலைதளத்தில் அவரது முந்தைய கருத்தை மாற்றவோ "வசவு" வார்த்தைகளை மறுக்கவோ முடியாமல் "சுய நிர்ணைய" உரிமை என்கிற புதிய இனவாத கருத்தாக்கத்தில் சுயமாக தன்னை குறுக்கி கொண்டு சி.பி.எம்மை கழுதை என வசைபாடுகிறார்.

எதற்காக? சி.பி.எம். சுய நிர்ணைய உரிமையை கோரிக்கையாக முன்வைக்கவில்லை என்பது தான் அவரது குற்றச்சாட்டு.

இலங்கை என்கிற இன்னொரு நாட்டில், பிரதானமான இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களை சமமாக நடத்தவோ, வேலை கல்வி உட்பட ஒரு தேசத்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்கவோ மறுக்கிற பெரும்பான்மை இனவாதம் (இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்) பேசும் அரசாங்கம் அதன் முன்னால் சுயஉரிமை கோரிக்கை வைப்பது முடவன் கொம்புத்தேனுக்கு அசைபட்டது போலத்தான்.

எந்த கோரிக்கையை வேண்டுமென்றாலும் முன்வைக்கலாம் அதற்காக போராடலாம் தவறில்லை, ஒரு ஜனநாயக அமைப்பு நிலவுகிறது எனில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படவில்லை எனில், உயரிய விழுமியங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் இலங்கை பிரச்சனையில் யதார்த்த நிலைமை என்ன? ம.க.இ.க மடையர்கள் சி.பி.எம் கழுதை என திட்டி தங்கள் பாணியில் திசை திருப்பி "கனைக்கும்" பொது நமக்கொன்றும் வியப்பில்லை. ஏனெனில் அவர்கள் வாழும் இந்தியாவின் யதார்த்த நிலைமைகளையும், மக்களின் உடனடி பிரச்சனைகளையும் எப்படி கையாள்வது என்பதை தெரியாமல் "புத்தகத்தில் படித்த" புரட்சி வசனங்களை அப்படியே உருவிடுவதை புரட்சிப்பணியாக கொண்டவர்கள் அல்லவா!!

சுய நிர்ணைய உரிமை வழங்க வேண்டுமென்று இலங்கையில் போராடுபவர்களே கோரிக்கை வைக்க முடியவில்லை. ஏனெனில் அரசியல் அதிகாரம் வழங்க மறுப்பவர்கள் சுயநிர்ணைய உரிமை கொடுப்பார்களா? நேரடியாக பிரிவினை கோரிக்கையை வைத்து ஒரு தீவிர வாத அமைப்பு போராடும் ஒரு தேசத்தில்?

என்ன விலை கொடுத்தும் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதை தனது கடமை என கொள்கை பிரகடனம் செய்துள்ள இன வெறி அரசின் முன் இன்னொரு நாட்டிலிருந்து எந்த மாதிரி கோரிக்கையை எழுப்ப முடியும் என்பதை சிந்திக்க கூட ம.க.இ.க. வால் முடிய வில்லை என்பதும் நமக்கு வியப்பளிக்க வில்லை.

ஏனெனில் மடையர்கள் கலை இலக்கிய கழகத்தினர் ஒரு திசை திருப்பும் சீர்குலைவு சக்தி, மக்களை திரட்டி போராடும் புரட்சிகர அமைப்பான சி.பி.எம் ஒரு கோரிக்கையை இன்றிருக்கும் நிலைமையிலிருந்து மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபடி மேலாக உயர்த்தும் விதமாக முன்வைத்தால் ம.க.இ.க அதே கோரிக்கையின் இறுதி வடிவத்தை முன்வைப்பார்கள். புரட்சி கட்டத்தை அடைந்து விட்டோம் அதற்க்கு தடை சி.பி.எம் தான் என்று கனைத்துக்கொண்டு எழுவார்கள். கூடவே சி.பி.எம் ஐந்து பைசா பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்தே போராடுகிறார்கள் என்று மட்டம் தட்டுவார்கள். இதன் மூலம் மக்களின் ஒற்றுமையையும் மன உறுதியையும் குலைப்பதை தவிர வேறு என்ன பயன் கண்டார்கள்?

இந்த "புரட்சிகர வாய்வீச்சு" இலங்கை பிரச்சனையில் முத்துக்குமாரின் மரணத்தை தொடர்ந்து தமிழ்கத்தில் ஏற்பட்ட அசாதாராண சூழ்லில் "புரட்சிகர ஒப்பாரியாக" வெளிவந்தது ம.க.இ.க தங்களுக்குள்ளாலேயே கொள்கை தடுமாற்றம் கொண்டு தள்ளாடுகிறார்கள்.

இலங்கையில் கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்து வரும் சுதந்திரத்துக்கான போராட்டம், விடுதலை புலிகள் அமைப்பு தோற்றுவிக்கபட்டபின் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்தது.

ஆயுத போராட்டத்திற்கு படை திரட்டும் போதே ஜனநாயக அரசியலுக்கும் தமிழ் மக்களை அணிதிரட்டி இருக்க வேண்டும், கூடவே சிங்கள மக்களில் ஜனநாயக எண்ணம் கொண்டவர்களின், உழைப்பாளிகளின் ஆதரவை பெறும் முயற்சியிலும் வி.பு ஈடுபட்டிருந்தால் இன்றைக்கு ஏற்பட்டிருப்பதை போன்ற நெருக்கடியை அவர்கள் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது. எந்த பயனுமின்றி அப்பாவி மக்கள் மடியும் நிலையும் உருவாகி இருக்காது.

அரசியல் ரீதியாக கடந்த சில பத்தாண்டுகளாக வி.பு செய்த தவறை நக்சல் அமைப்புகளும் இந்தியாவில் செய்து வருகின்றன. ம.க.இ.க வும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் காரணமாக "புரட்சி முழக்கம்" "ஒப்பாரியாக" மாறி சந்தி சிரிக்கிறது

பின் குறிப்பு: தமிழரங்க்கில் திரு.ரயாகரன் பின் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிரான பின்னூட்டங்களை வெளியிட மாட்டோம், பிறர் எச்சி துப்புவதும் அதனை துடைப்பதும் தங்களின் பணியல்ல என்கிறார். அவர்களே அப்பணியை செவ்வனே தாங்களுக்குள்ளால் செய்வதனால் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இங்கே இடப்படும் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறத்தலுக்கு பின் வெளியிடப்படும்.

Thursday 19 February 2009

முத்துகுமார் தற்கொலை ஒரு விவாதம்...

தோழர். தமிழ்ன்பன் கேள்வியிலிருந்து தோழர்.ஷ்யாம்: முத்துகுமார் பத்தி பேசுறிங்களா? அவரை யார் தூண்டிவிட்டது என்று சொல்லமுடியுமா?

நான்: பித்தலாட்ட அரசியல் வாதிகள்தான் வேறு யார்?

தமிழ்: அந்த நெருப்பு இளைஞன்தான் போராடசொல்லி எங்களை தூண்டி விட்டிருக்கிறான்.

நான்: இதை பற்றி நான் என்ன சொல்ல, ஒருவர் தற்கொலை செய்துகொள்வதுதான் உங்களை போராடத்தூண்டுமெனில் அதற்க்கு உங்கள் அரசியல் மற்றும் சமூக கண்ணோட்டமே காரணமாக இருக்க முடியும்.

ஷ்யாம்:தமிழன்பன் சொல்வது, தோழர்.முத்துகுமாரின் தியாகம் தான் நம்மை ஒருமுகப்படுத்தி ஒன்றிணைத்து இருக்கிறது என்று! புரிந்துகொள்ளுங்கள்!
முத்துகுமாருக்கு முன்பும் நம் தோழர்கள் போராடிக்கொண்டுதான் இருந்தார்கள்!
ஆனால் முத்துகுமாரின் தியாகத்திற்கு முன் .........

நான்: என்ன தோழர் சொல்கிறீர்கள்!!

முத்துக்குமாருக்கு முன் திருமா சாகாத உண்ணா விரதம் இருந்தார்...
அதை சரியான விதத்தில் தனது கட்சி அணியினரை கொண்டு தொடரசெய்யாமல் யார் யாரோ கேட்டுக்கொண்டார்கள் என்ற காரணத்தால் போராட்டத்தை அம்போவென்று விட்டார்.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முத்துக்குமார் மிதமிஞ்சிய கழிவிரக்கமும், தனி ஈழநாட்டின் மீதான பற்றும் பிரபாகரன் என்கிற தனித்தலைவன் மீதான பாசமும் அது ஈடேறாதோ என்கிற விரக்தியிலும் மனச்சிதைவுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு அவரது அரசியலற்ற, ஒபாமாவை நம்பிய, தேசியத்தின் ஒரேதலைவர் பிரபாகரன் என அறிவித்த, பிணத்தை கைப்பற்றி போராடுங்கள் என கேட்டுக்கொண்ட இறுதி கடிதமே சாட்சி.

மனச்சிதைவை நோயாகப் பார்க்காமல் தியாகமாக கொண்டாடுவது தமிழ் சமூகத்தின் சாபம்.

அதற்க்கு முன் பின் என்று எந்த நல்ல மாற்றமும் தமிழகத்தில் நிகழவில்லை.

ஷ்யாம்:
***ஒபாமாவை நம்பிய, தேசியத்தின் ஒரேதலைவர் பிரபாகரன் என அறிவித்த***
இதற்காக அவரை நீங்கள் விமர்சித்திருந்தால் பரவாயில்லை!
அவருடைய பார்வையை எப்படி நீங்கள் அரசியலற்ற பார்வை என்கிறீர்கள்? அவருக்கு ஏதோவொரு பார்வையாவதிருந்திருக்கிறதே! அவர் வயதொத்த எத்தனையோ பேர் மானாட மயிலாட பார்த்து கொண்டிருக்கும் போது...

பிணத்தை கைப்பற்றி போராடுங்கள் என்பது உங்களுக்கு சாதாரண விடயமாக படுகிறது! அதுவே மிக முக்கியமான அரசியல் முடிவாக தெரிகிறது எங்களுக்கு!

உலகமயமாக்கலுக்கு பின், நுகர்வுகலாச்சாரத்தில் மக்கள் திளைத்த பின், இந்த பிழைப்பு வாத சமூகம் எழுச்சியை எப்போதாவது சந்தித்திருக்கிறதா? முத்துகுமாரின் தியாகம் அதை உருவாக்கி இருக்கிறது! மாணவர்களை எழுச்சி படுத்தி இருக்கிறது! இதை மாபெரும் மக்கள் எழுச்சியாக மாற்றவேண்டிய நேரத்தில், அதை நீர்த்து போக செய்ததில் கம்யூனிஸ்ட்களுக்கும் பங்கிருக்கிறது!

நான்: என்ன பார்வை மாணவர்களே வழக்கறிஞர்களே அரசியலை நம்பாதீர்கள் என்றதையா? அல்லது தமிழ் தேசிய அரசியலா?


மனச்சிதைவடைவதும் "மானாடமயிலாட" பார்ப்பதும் சமமான சமூக பலனையே கொடுக்கப்போகிறது. உணர்சிகளை தூண்டி விடுவதனால் ஏர்படும் எழுச்சி அதன் லட்சியத்தை இதுவரை தொட்டதாக சரித்திரம் இல்லை.

சரியான சமூக மாற்றுக்கான அரசியல் படுத்தப்படாத வரை தமிழ் சமூகம் இதை அனுபவைத்தாக வேண்டியது தான்.

தற்கொலை செய்து கொண்ட பிணத்தைகைப்பற்றுவதும் அதனை வைத்து போராடுவதும் உங்களுக்கு அரசியல் முடிவாக படுகிறது எனில் அது தவறான அரசியல் முடிவே அன்றி சமூக மாற்றம் கொண்டுவரும் ஒன்றல்ல.

நுகர்வு கலாச்சாரம் உலக மயம்த்திற்க்கு முன்னரே உண்டு. உலகமயம் அதனை இன்னும் அதிகரிக்க செய்தது என்பது உண்மை. ஆனால் உலகமயம் என்னும் பொருளாதார கொள்கை உலக பொருளாதார யதார்த்தம். அதனை ஒவ்வொரு நாடும் எப்படி பயன் படுத்துகிறது என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும்.

முத்துக்குமாரால் ஏர்பட்டது எழுச்சியல்ல மரணத்தின்பால் ஏர்பட்ட ஆற்றாமை. அதை கம்யூனிஸ்ட்கள் நீர்த்து போகசெய்ய வேண்டியதில்லை. தானே போய்விடும்.

ஷ்யாம்: ***முத்துக்குமாரால் ஏர்பட்டது எழுச்சியல்ல மரணத்தின்பால் ஏர்பட்ட ஆற்றாமை. அதை கம்யூனிஸ்ட்கள் நீர்த்து போகசெய்ய வேண்டியதில்லை. தானே போய்விடும். ***

ஆமாம் உங்கள் அடையாள போராட்டம் தான் உன்னதமானது! அது தான் தீர்வை கொடுக்கும்!
விடுங்கள்.. உங்களிடம் ஏற்கனவே சொன்னது போல... நானும் இனி உங்களிடம் ஈழ பிரச்னையை விவாதிக்க போவதில்லை

நான்: தீர்வை புரட்சி மட்டுமே கொடுக்கும், அதற்கு குறிப்பிட்ட அளவுக்கு மக்களின் பங்களிப்பு வேண்டும். அதற்க்கு அடையாள போராட்டமும் இன்னும்பிற மக்கள் இயக்கங்களும் உதவும். அல்லாமல் தற்கொலை செய்வதோ அதை வைத்து அரசியல் செய்வதோ நாம் விரும்பும் பயனை தராது, என்னிடம் விவாதிக்காமல் தவிர்ப்பதால் ஈழ பிரச்சனை தீர்ந்து விடுமென்றால் அப்படி செய்யுங்கள்.நீங்களும் உணர்சி பிழம்பாகவே இருக்கிறிர்கள்.
நன்றி.

ஷ்யாம்: ஆம் நீங்கள் செய்வது மட்டுமே புரட்சி!
மக்களை ஒன்று திரட்ட இதை பயன்படுத்தாமல்.... இழிவு செய்து... விடுங்கள்!

நான்: தோழர் ஆத்திரப்படுவதனால் எந்த பயனும் இல்லை,

நாங்கள் புரட்சி செய்யவில்லை. அதை நாங்கள் மட்டுமே செய்ய முடியும் என்கிற மதப்பும் எங்களுக்கில்லை. ஆனால் புரட்சிக்கு மக்களை தயாராக்கும் போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக தொடர்ந்து செய்து வருகிறோம்.

முத்துக்குமாரின் மரணத்தை வைத்து எதற்காக என்ன சொல்லி மக்களை திரட்ட சொல்கிறிர்கள்? தமிழ் தேசியம் அமைக்கவா?

எனக்கு ஒன்றும் புரிய வில்லை.

தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் அரசியலே வேண்டம் என்றவர், பிரபாகரனை விட்டால் தேசியத்துக்கு வேறு தலைவர் இல்லை என்றவர்,ஒபாமாவை நம்ப சொன்னவர்?

இதில் எதை சொல்லி கம்யூனிஸ்ட்கள் மக்களை திரட்ட.

அவரது மரணத்தை இழிவு படுத்த வில்லை. ஆனால் அதை புனித படுத்த முயற்சிக்கும் போது விமர்சிக்காமல் இருக்க முடியாது. நிங்கள் தவிர்பதனால் விமர்சனம் ஓட்டு மொத்தமாக முடங்கி போகாது.



Monday 16 February 2009

நீலகண்டன் அவர்களின் கட்டுரைக்கு...

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல்

பின்னூட்டம் (1)


திரு. நீலகண்டன் அவர்களின் கட்டுரை காலச்சுவடு கண்ணனை பற்றி காலத்தை உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.

அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் கொஞ்சம் கூசுவதாக உள்ளது எனினும், "பொறம்போக்கை" போன்றவர்கள் நெய்தடவி கொடுத்துள்ள "இந்துத்துவ" விளக்கத்தை படிக்கும் போது ஏர்ப்படுகின்ற அளவுக்கு அருவருப்பு இல்லை.

அந்த விளக்கத்தில் பொதிந்திருக்கும் பார்ப்பனீய மதம் சார்ந்த பற்றும் அது அக்கட்டுரையால் ஆட்டம்காணுகிறது எனபதால் "பொரம்போக்குக்கு" ஏர்படும் பதட்டமும் நீலகண்டன் அவர்களின் கட்டுரையின் தேவையை சமூகத்திர்க்கு உணர்த்துகிறது.

பின்னூட்டம் (2)
Dear Puram Boakku!!
இந்து மதத்திர்க்கு ஐய்யாயிரம் ஆண்டய வரலாற்று பின்புலத்தை கொடுக்கும் போதே நீங்கள் பார்ப்பனீயத்தை அவர்களுக்கே உரிய "ஆரத்தழுவி கழுத்தை நெரிக்கும்" முறையை பயன்படுத்தி முன்மொழிகிறீர்கள் என்பதை உணர முடிகிறது.

சித்தர்களை இந்துக்களாக அடையாளப்படுத்துகிறீர்கள், இஸ்லாமியர்களும், கிரிஸ்தவர்களும் எப்படி இந்தியாவில் வாழவேண்டுமென்பதை ஆர்.எஸ்.எஸ் சாகாவில் பாடம் நடத்துவதை போல் சொல்லிகாட்டுகிறீர்கள்.

கூடவே பதட்டமில்லை என்றும் சொல்கிறீர்கள் ஏனோ?

சமூக ஒற்றுமையை குலைப்பவர்கள் இந்துத்துவம் பேசும் ஆர்.எஸ்.எஸ் தான் என்பதையும், இந்தியாவில் சிறுபான்மை மக்களின் வகுப்புவாதம் வளர்வதர்க்கு, ஆர்.எஸ்.எஸ் சின் நடவடிக்கைகளே காரணம் என்பதையும் உணர்ந்து கொள்வதும் அவர்களை தனிமைப்படுத்துவதும் அல்லவா சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

அதைவிட்டு நெய்யோ தேனோ தடவியோ அல்லது தடவாமலோ பார்ப்பனீயம் பேசுவதால் பயனுண்டா?

பின்னூட்டம் (3)


Dear Puram Boakku
அவர்கள் கிப்புத் ன்மை , ரந்தப்பான்மை, ல்லருத்துக்களை எடுத்துக் கொள்ளும் ண்பு ஆகியஇந்தியமுதாயருத்துக்களை முழுமையாகஉள் வாங்கி சிறப்பு பெற வேண்டும் என்பதே ம் எண்ணம்"என்று கூறியிருக்கிறேன். இது நல்ல கருத்துதான்.


உங்களின் நல்ல மனது எனக்கு புரிகிறது, ஆனால் நீலகண்டன் அவர்களின் கட்டுரை காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் பற்றியது,

இந்தியாவில் ஆண்ட ஆளுகின்ற அரசுகள் மக்கள் ஒற்றுமை பாதுகாப்பதை விட குலைப்பதிலேயே அதிக அக்கறை காட்டினார்கள்,

இந்துமத தீவிரவாதிகளின் நடவடிக்கைகளாலேயே இந்தியாவில் வகுப்புகலவரங்கள் உருவாகின்றன,

அப்படி இருக்க தாங்கள் அதனை வழிமாற்றி விடும் நோக்கத்தோடு சிறுபான்மை மக்களுக்கு அறிவுரை கூறுவதாக கருதுவதர்கு உங்களின் பதிவில் அதிக வாய்ப்புள்ளது.

மேலும் "இந்து" என்கிற பதப்பிரயோகம் அரேபியர் படைஎடுப்புக்கு பின்னரும் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகுமே உருவானதாக வரலாறு கூறுகிறது.

சகிப்புதன்மை, பரந்த மனப்பான்மை, நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளல் என்கிற உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நட்புடன்
Baappu

இராசேந்திர சோழன் கட்டுரைக்கு...

ஈழச் சிக்கலும் இடதுசாரிகளும்

பொய்பிரச்சாரத்தை செய்துவரும் திரு.இராஜேந்திர சோழனுக்கு மேலே பின்னூட்டமிட்டுள்ள தனா, புதூர் சிபி, கருப்பையா பாரதி, ஜீவா, யாழேந்திரன் ஆகிய தோழர்கள் சரியான விதத்தில் பதிலளித்துள்ளனர். அவர்களுக்கு எனது தோழமையுடன் கூடிய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியேனும் இராஜேந்திர சோழன் தனது பொய்பிரச்சாரத்தை கட்டுரைவடிவில் பதிவிடுவதை நிறுத்திக்கொள்வார் என நம்புகிறேன்.

தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் அதாவது புலிப்படையை தமிழன் ராணுவமாம் அப்படி அழைக்கிறார்கள், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி......என்று புருடாவிடுவதையே தமிழுக்காற்றும் தொண்டாக நினைப்பவர்கள்,

வார்த்தை ஜாலத்தாலேயே அனைத்தையும் பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் தமிழகத்து தேர்தல் அரசியல் வியாபாரிகள் மக்களை ஏமாற்றுவதை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு வருவதைத்தான் இவர்களின் பித்தலாட்டங்களுக்கு பெரிய ஆதரவு இல்லாமலிருக்கும் நிலை தெளிவாக்குகின்றது.

இந்நிலையில் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளையும் போராட‌ தூண்டி விட்டிருக்கிற‌ர்க‌ள். இந்தி திணிப்பு எதிர்ப்பை இந்தி எதிற்பாக‌ மாற்றி மாண‌வ‌ர்க‌ளின் உயிரை குடித்த‌வ‌ர்க‌ள்.

ஒன்றுப‌ட்ட‌ குர‌லில் த‌மிழ‌க‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ரின் விடுத‌லைக்காக‌ குர‌ல் கொடுக்க‌ கோரினால் அத‌னை ஏற்காம‌ல் எப்போதும்போல் புலிப்பாட்டு பாடி த‌னி ஆவ‌ர்த‌ன‌ம் செய்து சிக்க‌லை வ‌லுக்க‌ செய்கிறார்க‌ள்.

த‌மிழக‌த்தில் இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் அனைவ‌ருக்கும் வேலை, க‌ல்வி, சுகாதார‌ம் கேட்டு மிக‌ எழுச்சியாக‌ ந‌ட‌த்திய‌ சைக்கிள் பிர‌ச்சார‌ இய‌க்க‌த்திற்கு இளைஞ‌ர்க‌ள் பெரும‌ள‌வு ஆத‌ர‌வாக‌ த‌மிழ‌க‌மெங்கும் திர‌ண்ட‌ன‌ர்,

சி.பி.ஐ.(எம்) நில‌ம்கேட்டும், ப‌ட்டா கேட்டும் ந‌ட‌த்தும் போராட்ட‌ங்க‌ளுக்கும் ஏகாதிப‌த்திய‌ ச‌க்திக‌ளுக்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ளுக்கும் ம‌க்க‌ளின் ஆத‌ர‌வும் க‌வ‌ன‌மும் ஏர்ப‌ட்ட‌ கால‌த்தில் தான் புலி ஆதரவு கட்சிகளின் இந்த‌ திசைதிருப்பும், ஈழ‌ம‌க்க‌ளுக்கு எந்த‌வித‌மான‌ ந‌ன்மையையும் பெற்றுத‌ராத‌ போராட்ட‌ங்க‌ள் தொட‌ங்கின‌ என்ப‌தையும் சேர்த்து பார்க்கும் போது இராஜேந்திர‌ச்சோழ‌னின் க‌ட்டுரையின் நோக்க‌ம் புரியும்.

பா.செயப்பிரகாசம் கட்டுரைக்கு.....

பூக்கூடையில் மினுக்கும் கத்தி

பின்னூட்டமிட்ட தோழர்கள் R.Nagasundaram, venkat, விடுதலை,purachikkaran,கருப்பையா, mathi, கவிதைகிறுக்கன், புதூர் சிபி, சந்தான பாரதி, உய்யலாலா, ஜீவா, ljngsami ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றியும்.

பா.செ.பி யின் கட்டுரை அவரது அடிமனதிலுள்ள கழ்புணர்சியை வெளிப்படுத்தி மன அமைதி பெறுவதற்கு உதவியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஆனால் நீங்கள் அனைவரும் சரியான மறுப்பு கருத்துக்களை பின்னூட்டமாக இட்டு அவருக்கு மீண்டும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறீர்கள்.

அது இலக்கிய தர்மமாக இருந்தால் கூட, தனிப்பட்ட முறையில் டாக்டர் பாண்டியன், முருகேசன் போன்ற அன்பர்களுக்கு வேதனையை கொடுத்திருக்கும்.

புலிகளின் சர்வாதிகாரத்தில் தனி தமிழ் ஈழமும், தமிழ் தேசியவாதிகளின் (எந்த குரூப்புனு தெரியல) தனி நாடும் வந்த பிறகு தமிழின், தமிழனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணலாம். பொறுத்திருங்கள்.

அதர்க்குள் ம.க.இ.க புரட்சியை நடத்தி முடிக்கவும் வாய்ப்புண்டு.

அதைவிட்டுவிட்டு ஒன்றுபட்ட இலங்கை அதிக அதிகாரம், மாநில சுயாட்சி, பேச்சுவார்த்தை தீர்வு, ஆர்ப்பாட்டம், போராட்டம், ஐ.நா சபை தலையீடு என்று இல்லாத ஊருக்கு வழிகாட்ட கூடாது.

ஒரே அடியா புர்ர்ர்ர்ர்ர்ர்சி செய்து நந்திகிராம், சிங்கூர் மாதிரி மமதாயிஸ்ட் சோஷலிஸ்ட் நாட்டை உருவாக்க வேண்டும்.

உங்களை பற்றி (மார்க்சிஸ்ட்களை) ஏர்க்கனவே ஒரு பேச்சுண்டு எந்த பிரச்சனைண்ணாலும் இவனுக பேச்சுவர்த்தி மூலம் தீர்வு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுணு சொல்வாங்க, எவ்வளவு நாள்தான் பெசுவது,

"எப்பப்பாரு பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கண்ணுட்டு"

இனிமுதல் மார்க்சிஸ்ட்கள் அப்படி சொல்லாமல் வெட்டுங்க குத்துங்க சுட்டுதள்ளுங்க குண்டு போடுங்கணு சொல்லணும்

அதாவது "கொல்லுங்க கொல்லுங்க கொண்ணுகிட்டே இருங்க" ணு

எனில் புலிப்பாசாணம் சாப்பிட்டவர்களுக்கும், சர்வ ரோக நிவாரிணியான தமிழ்தேசியவாதிகளுக்கும் மார்க்சிஸ்ட்களின் இனப்பற்று புரிய வாய்ப்பாய் இருக்கும்.
----------------------------------------------------------

போன்னிலாவின் கட்டுரைக்கு...

முத்துக்குமாரை புதைத்தவர்களும்... விதைத்தவர்களும்...

பின்னூட்டம் (1)


பொன்னிலாவின் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என யாருக்கேனும் புரிந்து கொள்ள முடிகிறதா?

நம்பிக்கைக்குரிய ஒபாமாவே என்றழைத்து நியாயம் கேட்ட முத்துக்குமார்!

பிராபகரன் மட்டுமே தேசியத்தின் ஒரேதலைவர் என்று அடையாளப்படுத்தும் முத்துக்குமார்!!

அப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழக தமிழனுக்கு இல்லையே என அங்கலாய்த்த முத்துக்குமார்!!!

மாணவர்களே, வழக்கறிஞர்களே உங்களைத்தான் நம்பியுள்ளேன் தொடர்ந்து போராடுங்கள் ஆனால் அரசியலை நம்பாதீர்கள் என்று அறைகூவல் விடுத்த முத்துக்குமார்!!!!

கடைசியக எனது பிணத்தை கைப்பற்றுங்கள் அதனை ஒரு கருவியாக கொண்டு போராடுங்கள் நான் செத்து போகிறேன் என்று தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார்!!!!!

இவர்தான் தமிழகமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய "மாமேதை" (நன்றி:Dr.V.Pandian feed back)

இந்த கட்டுரை தமிழகத்தில் பித்தலாட்ட அரசியல் நடத்தும் ஓட்டுப்பொறுக்காத புரட்சி இயக்கத்துக்காக எழுதப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

சிங்கள இனவெறியர்களிடமிருந்து ஈழத்தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டு மெனில் புலிகள் தொடர்சியாக செய்து வந்த அரசியல் தவறுகளை திருத்தி ஈழதமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து மக்களை திரட்டி போராடுவதும் அதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை ஈட்டுவதும் தான் ஒரே வழி. அல்லது அவர்களின் அழிவு மட்டுமே நிதர்சனமாகும்.

விடுதலைக்கான போராட்டம் புலிகள் இல்லை எனினும் ஒடுக்கப்படும் மக்கள் நடத்துவார்கள், இன்றைக்கு இல்லை எனில் நாளை அது வெற்றிபெறும். ஏனெனில் சுதந்திரமும் சுயமரியாதையும் எதனோடும் ஒப்புமை செய்ய முடியாத உன்னதமானது.
-------------------------------------------------------------------------------
பின்னூட்டம்(2)

Dr.V.Pandian, பாண்டியராஜா ஆகியோரின் தமிழ்தேசிய பேராசைக்கு பொன்னிலா கொடுத்துள்ள பதில் கீழே!!

தோழர்களே!

கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் உருவாகி வளர்ந்த திராவிட இயக்கம் தேர்தல் அரசியலில் சீரழிந்து அதன் இறுகிய வடிவத்துக்கு இன்று வந்திருக்கிறது, அதே நேரம் அரசியலற்ற வெற்று தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் பல நேரங்களில் பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.

செல்வவேந்தன் சொல்கிறார்:
இவர்கள் தன்னை தானே நக்கிக்க் கொள்ளுபவர்கள் . அதானால்தான் நின்டதொரு அறிக்கை !

பிணஙக்ளை தின்பதைசுட்டி காட்டினால் தன்னைத்தானே நக்கி கொள்கிறார்கள் என்ற குற்ற சாட்டு......வாழ்க இன்ஸ்டன்ட் புரட்சி.

டாக்டர் பாண்டியன்:தமிழ்த்தேசியம் என்றவுடன் சில நன்பர்களுக்கு ஜுரம் கண்டுவிட்டது போலும். சில கசப்புகளை நீங்கள் வழுங்கித்தான் ஆகவேண்டும் தோழ்களே

ஜூரம் கட்டுரையாளருக்கா அல்லது பின்னூட்டமிட்ட எனக்கும் விடுதலைக்குமா?

எங்களுக்கு எந்த ஜூரமும் பிடிபடாது அன்பரே, தமிழக மக்கள் திராவிட நாடு கோரிக்கையையே நிராகரித்தவர்கள். அவர்களுக்கு தெரியும் தனி தமிழ் நாடு யாருக்கானது என்பதை. பண்டைய குறுநில மன்னர்களை போல் இன்று தமிழகத்தில் நாட்டாமை நடத்தும் நிலச்சுவாந்தார்களின் போலிமுகம் தான் தமிழ் தேசியம் என்பதை பெரும்பான்மை தமிழர்கள் உணருகிறார்கள்.

வே.பாண்டியராஜா:பொன்னிலாவின் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் யதார்த்தமானது.தான் வாழ்ந்தால் மட்டும் போதும் இனம் அழிந்தால் என்ன? மொழி அழிந்தால் என்ன? என விதண்டாவாதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழும் 'பாப்புகளும்' 'விடுதலைகளும்' எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்

இன மொழி காவலர்களால் தான் தமிழகமும் தமிழும் நாசமானது. வீடு எரியும் போது வாழை வெட்டுபவர்களை நினைவு படுத்தும் விதமாக இலங்கை தமிழ் மக்கள் புலிகளினுடையவும் இனவெறி ராணுவத்தினுடையவும் ஆயுதங்களுக்கிடையில் சிக்கி தவிக்கும் போது இங்கு தமிழ் தேசிய கூச்சல் வேறு.

கருனநிதி கைது செய்யப்பட்டபோது யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை?கருனநிதிக்காகவும்,அவரது குடும்ப அரசியல் நலனுக்காகவும் தமிழகத்தில் யாரும் கொலை செய்யப்படவில்லை?ஜெயலலிதாவுக்காக யாரும் பேருந்தில் வைத்து மாணவிகளை எரிக்கவில்லை? கருணாநிதியும், ஜெயலலிதாவும் எவ்வித சதியிலும் ஈடுபடாமல் தத்தமது கட்சிகளில் தலைமைப்பதவிக்கு வந்தார்கள். கருணாநிதி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையும், ஜெயலலிதா கருணாநிதியின் அரசியல்வாழ்க்கையையும் அழிக்க முயற்சி செய்ததேயில்லை? இவர்களின் அழிப்பு முயற்ச்சியில் தமிழக மக்களை இவர்கள் எப்போதும் சந்தோசமாக வைத்திருந்தார்கள்?

இதை விட வேறு யாரும் முத்துக்குமாரின் மரணத்தையும் ஈழமக்களின் போராட்டத்தையும் கேவலப்படுத்த
முடியாது.
-------------------------------------------------------

பின்னூட்டம்(3)

அன்புடன் கட்டுரையாளருக்கும்,வே.பாண்டிராஜா,டாக்டர் வி.பாண்டியன் ஆகியோருக்கும் வணக்கம்,

பாண்டிராஜா: பாப்பு போன்றவர்கள் தமிழகத்தின், தமிழ் இனத்தின் எல்லா பிரச்சினைகளிலும் குறுக்குசால் ஒட்டிக்கொண்டிருப்பதால் தான் தமிழர்கள் தங்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாமல் நிர்கதியாக நிற்கிறார்கள்.

தமிழினத்தின் பிரச்சனைகளில் குறுக்குச்சால் ஓட்டி இனவெறியை தூண்டி திசைதிருப்பல் நடத்துவது யார்? நதிநீர் பிரச்சனைகளில் அதை பார்த்தோம். இப்போது ஈழப்பிரச்சனையிலும் அதே நிலை. எல்லாவற்றிற்க்கும் மற்றவர்களை கைகாட்டி தங்களின் பொறுப்புகளை தட்டிகழிக்கும் நிலைபாட்டை திராவிட அரசியல் கட்சிகள் எடுக்கும் போது, எல்லாவற்றிர்கும் தீர்வு தமிழ் தேசியம் தான் என்று திரிப்பது இன்னொரு கூட்டம்.

முதலில் நதி நீர் பிரச்சனைகளை எடுப்போம்: மழை பொழிவு தேவையான அளவு இருக்கும் போது தமிழகத்தில் காவிரி,முல்லை பெரியாறு பிரச்சனை பற்றி எந்த சத்தமும் எழாது. ஆந்திரா கர்நாடகம் இடையே ஒரிசா ஆந்திரா இடையே என இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களுக்கு நதிநீர் பிரச்சனை உண்டு. இவை எல்லாம் தனித்தனி நாடுகளானால் தீர்க்க படுமா இப்பிரச்சனை?

தமிழக தண்ணீர் பிரச்சனையை நாமே தீர்த்துகொள்ள ஆளும் அரசுகள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்று தமிழ் தேசியவாதிகள் பரிசீலிக்கிறார்களா? நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள செல்வந்தர்களை வெளியேற்றவோ ஏழைகளுக்கு மாற்று இடம் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. அவற்றை பராமரிப்பதும் இல்லை.

மழைநீரை பயன்படுத்த சரியான திட்டமிடல் இல்லை. காவிரி உட்பட உபரி நீர் பெருக்கெடுக்கும் நதிகளில் வரும் நீரை பயன்படுத்த நடவடிகை இல்லை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திர்கு போதிய முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

அடுத்து விவசாயிகள் பிரச்சனை: முதலில் செய்யவேண்டியது என்ன நிலசீர்திருத்தம். நில உச்சவரம்பு சட்டத்டை அப்படியே நீர்த்துபோக செய்த பெருமை திராவிட அரசாங்கங்களையே சாரும். அதைப்பற்றி தமிழ் தேசியவாதிகளின் கருத்து என்ன? மாநிலத்தில் நிலசீர்திருத்தம் செய்ய தடையாக இருப்பது இந்திய தேசியமா?

மொழிவளர்சி: தமிழை வளரவிடாமல் தடுப்பது கல்வி வியாபாரிகளுடன் உறவாடும் ஆளும் ஆதிக்க சக்திகளல்லாமல் வேறு யார்?

இப்படி குறுகுச்சால் ஓட்டி விட்டு மார்க்சிஸ்ட்களை குறை கூறலாமா?

ஈழப்பிரச்சனையில் காலத்திற்கேற்ற அரசியல் திட்டத்துடன் போராட்டத்தை தொடராமல் ஃபாசிஸ்ட் போக்கை புலிகள் பின்பற்றியதால் இன்று தனிமை பட்டிருக்கிறார்கள். ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண புலிகளோ அல்லது இனவெறி இலங்கை அரசோ இரண்டில் ஒன்று தோர்கடிக்கப்பட்டு முடக்கப்பட வேண்டும். வெற்றிபெறும் தரப்பு ஜனநாயக பாதையை பின்பற்றாமலிருந்தால் அதர்கெதிரான போராட்டத்தை அங்குள்ள மக்கள் முன்னெடுப்பார்கள்.

அதற்காக அப்பாவிகளை பலிகடா ஆக்க முடியாது. ரத்தக்காட்டேறிகளான இனவெறி அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் சிக்கி இருக்கும் மக்களை விடுவிக்க உடனடி போர்நிறுத்தம் அதுவே எங்கள் கோரிக்கையும் போராட்டமும் ஆகும்.

அல்லாமல் "காற்றுள்ள போதே தூற்றி கொள்ளும்" பிணவாத அரசியல் சந்தர்ப்பவாதமல்ல.

தமிழ் தேசியம் எதை பிரதிபலிக்கும் அத்தேசியத்தில் மக்களின் உரிமைகள் எப்படி இருக்குமென்று அவ்வாதத்தை ஆதரிப்பவர்கள் விளக்குவார்களா?

உண்மையில் தமிழகத்து மக்களுக்கு விடுதலை என்பது அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ அமைப்பிலிருந்து தான் பெறவேண்டுமேய‌ல்லாமல் இந்தியாவிலிருந்தல்ல. அந்த விடுதலையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. மாநில சுயாட்சியே இன்றைய அவசர தேவை.

டாக்டர்.வி.பாண்டியன்:அதோடு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவின் தென் கோடியை அரசியல் மயப்படுத்த உதவும் கருவிதான் ஈழம்'

இதன் பொருள் என்ன பாப்பு அவர்களே! சிறைக்கூடத்திலிருந்து விடுதலைதானே! இதுவா புரியவில்லை! பா...வம் நீங்கள்!

தேசிய இனங்களின் சிறைகூடமாக இந்தியா இருப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் தான் காரணமே அல்லாமல் வேறுபட்ட தேசிய இனங்களல்ல டா...க்டர். அதர்க்கு ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியே பிரிந்து செல்வதல்ல தீர்வு.

அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள பாட்டாளி மக்களின் ஒற்றுமை ஒன்றே வழி.

புத்த மதத்துக்குள்ளும் பொதுவுடைமை இயக்கத்துக்குள்ளும் பார்பனீயம் புகுந்து விட்டது என்கிறீரே ஏன் தமிழ் தேசியத்துக்குள் அது நுழையாதா? திரு.நெடுமாரனை கொண்டாடுவது பா.ஜ.க. என்று கேள்விப்படுகிறோம்.

மார்க்சிய பொது உடைமை இயக்கம் சரியான திட்டத்துடனும் கொள்கைகளுடனும் தான் முன்னேறுகிறது. அதனுள்வரும் பார்பனர்களானாலும் யாரானாலும் அந்த திட்டத்தையும் கொள்கைகளையும் பின்பற்றியே ஆக வேண்டும் அல்லது வெளியேற்றப் படுவார்கள்.

பொன்னிலா அவர்களே எந்த மரணத்தையும் கொச்சைபடுத்தாமல் சொல்கிறேன் முத்துக்குமார் ஆனாலும் யாரானாலும் தற்கொலை செய்துகொள்வது மனச்சிதைவின் வெளிப்பாடே அன்றி அரசியல் தெளிவல்ல.
----------------------------------------------
பின்னூட்டம்(4)

கீற்று வாசகர்களுக்கு வணக்கம்!

டாக்டர்.வி.பாண்டியன் எழுதுகிறார்: பாப்பு போன்ற பார்ப்பனக் கசடுகளுக்கு பதில் சொல்லிப் பயனில்லை!

ஒரு சில பொதுவான உண்மைகள்.......

தமிழ்நாடு தனிநாடானால் கன்னடருக்கு நம்மீது அச்சமிருக்கும். தணிணீருக்காக நாம் போர் தொடுக்கலாம் என்பதால் அவர்கள் ஞாயத்திற்கு கட்டுப்படுவார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் அதற்கு வாய்ப்பில்லை. ( நதி நீர் பங்கீடு தகராறு பாகிஸ்தானுக்கோ, பாங்ளா தேஷுக்கோ நமக்கோ வருவதில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள்).இதற்குமேலும் விளக்கம் தேவையில்லை என்பது எனது கருத்து.

டாக்டர் நீங்கள் மிகவும் உணர்சிவசப்பட்ட நிலையிலிருக்கிறீர்கள். இனவாதிகள் இப்படித்தான் இருப்பார்கள் பகுத்தறிவு என்பதை அவர்களிடம் காண்பதரிது.

கர்நாடகத்துடனோ அல்லது ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட உங்கள் மொழியில் (பிற) தேசிய இனங்களுடன் நாம் போர் தொடுத்தால் அவர்கள் என்ன பிரார்தனை செய்து கொண்டா இருப்பார்கள். இந்த பதிவுமூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் பல பத்தாண்டுகளாக புலிகள் போரிடுகிறார்களே தனி ஈழத்துக்காக அந்நிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டுமென்றா?

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஏர்பட்ட கதியை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

தமிழ் தேசிய வாதிகளும் ம.க.இ.க உள்ளிட்ட அழித்தொழிப்பு புரட்சிகாரர்களும் ரத்தக்காட்டேறிகளாக இருப்பதில் ஒற்றுமை பேணுகிறீர்கள். தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பான கால கட்டம் இது.

நில பிரபுத்தவம் என்பது:பண்ணையாளர்களும் நாட்டாமைகளும் தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் இல்லை என்று கூறுகிறீர்களே இதிலிருந்து தமிழகத்தை பற்றிய குறைந்த பட்ச அறிவுகூட உங்களுக்கு இல்லை என்பதை உறுதிபடுத்துகிறீர்கள்.

பார்பனன் என்றும் கசடு என்றும் பதர் என்றும் எந்த ஆதாரமும் இல்லாமல் பதிவிடுவது முத்துகுமாருக்கு ஏர்பட்டது போன்ற மனச்சிதைவின் வெளிப்பாடென்று புரிந்து கொள்கிறேன். நீங்கள் உடல் நலம் சார்ந்த டாக்டரா அல்லது தமிழ் தேசியத்தில் ஆராய்சி செய்து கவுரவமாக டாக்டரானவரா தெரிய வில்லை. எதுவானாலும் உடலும் உள்ளமும் நலமாய் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புலிகளின் அல்லது எந்த ஒரு விடுதலை இயகத்தினுடையவும் ஆயுதப் போராட்டத்தை குறைத்து மதிப்பிட வில்லை. ஆனால் ஜனநாயகத்தன்மையற்ற, சொந்தமக்களையும், எதிர்தரப்பிலுள்ள உழைப்பாளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக வாதிகள், சர்வதேச சமூகம் உட்பட யாரையும் மதிக்காமல் அவர்களின் நம்பிக்கையை பெறாமல் ஆயுத போராட்டம் மட்டுமே பிரிவினை மட்டுமே தீர்வு என ஃபாசிச நடவடிக்கையில் இறங்குவதும் இங்கு தமிழகத்தில் அதனை பின்பற்றி ஹிஸ்ட்டீரியா நோயாளிபோல் தனி ஈழம், தமிழ் தேசியம் தனிநாடு என்று கூச்சலிடுவதையும் விமர்சிக்காமல் இருக்க முடியாது.

ஒன்றை புரிந்து கொள்வது நல்லது.

நெற்றியில் பிறந்த பார்ப்பான் மற்றவரைவிட உயந்தவன் என்ற நஞ்சில் வளர்ந்தவன். அவர்கள் பொது உடைமை வாதிகள் அல்ல!

பார்ப்பான் நெற்றியில் பிறந்தான் என்று நீங்களே கூறுகிறீர்களே, அவர்கள் அதை இப்போதெல்லாம் பேசுவதில்லை எனக்கருதுகிறேன்.

ஒன்றுபட்ட இந்தியாவை பார்ப்பான் தான் ஆள்வான்!

எந்த ஜாதியில் பிறந்தவன் ஆளுவான் என்பதல்ல பிரச்சனை எப்படி ஆட்சி செய்கிறான் என்பதுதன் முக்கியம். முன் விதிகளோடு பிரச்சனைகளை அணுகுவது முட்டாள்தனம்.

ஆக, ஒன்றுபட்ட இந்தியா இருக்கும்வரை மார்க்ஸியம், லெனினியம் நிச்சயமாக வெற்றி கொள்ளாது!

அதல்ல பாட்டாளிவர்க்க ஒற்றுமை இல்லாதவரை எங்குமே அது வெற்றி பெறாது.

ஆக, இந்தியாவின் வர்க்கப் போராட்டத்தின் முதற்படி என்பது தேசிய இன விடுதலை என்பதே!

அனைத்து தேசிய இனங்களிலுமுள்ள உழைப்பாளிமக்களின் ஒற்றுமையே வர்க போராட்டத்தின் முதல் படி. அதர்குமுன் அனைத்து மாநிலங்களிலும் நிலசீர்திருத்தம் செய்ய வேண்டும் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்க பட வேண்டும், பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல பணிகள் உள்ளன.

உங்கள் தமிழ் தேசியத்தில் நிலைமை எப்படி இருக்குமென்று பதட்டபடாமல் ஒரு கட்டுரை வரையுமறு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்புடன்
Baappu
----------------------------------------------------------

பின்னூட்டம் (5)

கீற்று வாசகர்களுக்கு வணக்கம்,

டாக்டர் பாண்டியன் கூற்று: இந்தப் பாப்பு எனும் பார்ப்பனக் கசடு சொல்கிறது, ஈகி முத்துக்குமாருக்கு மனச்சிதைவாம்!நம்மை எல்லாம் மனச் சிதைவடைந்தவர்கள் என்று சொல்லும் துணிச்சில் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது பாருங்கள்! இது ஒரு பார்ப்பன தேசம்!!

தற்கொலை மனநிலை என்பது மனச்சிதைவுதான், எல்லோரும் அப்படி இருப்பதாக நான் சொல்லாத ஒன்றை சொல்லும் காமாலை நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும்.

பெரியார் அன்றே சொன்னார். இந்திய விடுதலை என்பது பார்ப்பானுக்குத்தான். நாம் வெள்ளையனுக்கு பதிலாக இனி பாப்பானுக்கு அடிமைகள் என்று.

எனில் அந்த அடிமை தளைக்கு எதிராய் போராடியாக வேண்டும். அது தொடர்ந்து நடக்கிறது. ஆனால் அதர்க்கான மாற்று தமிழ் தேசியமா என்பது தான் கேள்வி.

இன்னொன்றும் சொன்னார்! இந்தியா என்பது வெள்ளிரிக்காய்க்கு இரும்புப் பூண் போட்டது போல் என்று. இது தானே உடையும்!! அது நடந்தே தீரும்!!!

நிலப்பரப்புகளை பிரிப்பதைத்தான் "அது உடையும்" என்று பெரியார் சொன்னதாக தப்பிதம் செய்து புதிய பார்பானாக பரிணமிக்கிறார் திரு. பாண்டியன். இந்தியாவுக்கு போடப்பட்டுள்ள மத ஜாதி பூண், மூடநம்பிக்கை பூண்,பெண்ணடிமை பூண், சமூக நீதி மறுக்கும் பூண், நிலப்பிரபுத்துவ பூண், முதலாளித்துவ அரசமைப்பு பூண், அதிகாரக்குவியல் பூண், ஊழல் சுரண்டல் பூண் என பல அசிங்கமான பூண்கள் உள்ளன. அது உடையும், ஆனால் தானே உடையாது ஒடுக்கபட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் காரணமாக உடைக்கப்படும்.

இந்தக் கசடு சொல்வது போல, தீவிரவாதம் தேவேயில்லை நன்பர்களே! மக்கள் எழுச்சியின் முன் கோட்டைகள் சரியும்! இந்தியாவைப் பணியவைக்க ஜனநாயக ரீதியான போராட்டங்களே போதும்!

இந்தியாவை பணியவைக்க வேண்டியதில்லை, மேலே சொன்ன அமைப்பை பணிய வைக்க வேண்டும்.
வரி கொடா இயக்கம். தொடர் மறியல்கள். இன்னும் இது போன்று பல.

அது இந்திய தேசம் முழுமைக்கும் நடக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல. தனிநாடு (தேசியம்) கோரிக்கை சமூகத்தை நூற்றாண்டுகள் பின்னுக்கிழுப்பதர்க்கும் குறுநில மன்னர்களின் மனோபாவம் வளரச்செய்வதர்கும், உள்நாட்டு யுத்தம் உருவாகவும், ஏகாதிபத்திய ஊடுருவலுக்கும், சுரண்டலுக்குமே வழிவகுக்கும்.

நம் கண் முன்னே, நம்மின மக்களைக் கொன்று குவிக்கும் இந்நாடு நமக்கானதல்ல! நமக்கு இந்த நாட்டிலே மசிரளவும் மறியாதை இல்லை! இது ஒரு பார்ப்பன தேசம்!

பக்கத்து நாட்டில் நடக்கும் பிரச்சனையை ஒழுங்காக கையாளத்தெரியாத ஒரு தேசமாக இந்தியா இருப்பதை போலவே தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சனையை தீர்பதற்கு சொந்த நாடு என்ன செய்ய வேண்டுமென்பதை பற்றி அறிவுபூர்வமான கண்ணோட்டம் இல்லாமல் இவ்வளவு காலமும் உணர்சியை தூண்டிவிட்டு சொந்த அரசியல் மற்றும் பொருளாதார நலனுக்காக பித்தலாட்ட அரசியல் நடத்திய இனமானம் பேசும் தமிழ் தலைவர்களும் குற்றவாளிகளே. ஃபாசிச நடவடிக்கைகளுக்கு இம்மண்ணிலும் வாய்ப்பு ஏர்படுத்திய ஆட்சியாளர்களை எதிர்க்காமல் திசை திருப்புவதுதான் பார்ப்பனீய மனோபாவம். அதற்க்கு பாப்பானாக பிறக்க வேண்டியதில்லை. சுரண்டி கொழுக்கும் முதலாளித்துவ சிந்தனை போதும்.

அப்பாவி ஈழத்தமிழ் மக்கள் போர்களத்தில் இரு பிரிவு ஃபாசிஸ்ட் இன வாதிகளிடம் சிக்கி தவிக்கும் இக்கட்டான இக்காலத்தில் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்காமல் "வீடு எரியும் போது வாழை வெட்டும்" லாகவத்தோடு பிரிவினை பேசுவது தமிழ் இனமக்களின் பாலுள்ள பற்றும் பாசமும் அல்ல என்பதையும் அது அதிகாரத்திற்காக நாக்கை தொங்க போட்டுகொண்டிருக்கும் ஓநாய் தனம் என்பதையும் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

களப்பணி ஆற்று தமிழா!! களைக்காமல் பணியாற்று!! பார்ப்பானின் விதண்டா வாதங்களுக்கு பதிலளித்து நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.இந்தக் கடிதத் தொடரை முடித்துக் கொள்கிறேன்! சளைக்காமல் தொடரும் எனது களப்பணிகள்!

களப்பணியிலிருந்தும் பாதியில் ஓடிவிடப்போகிறீர்கள் "போலிதேசியம்" பேசி மக்களை முட்டாளாக்கும் நவீன பார்பனர்களே அதை மக்கள் காணத்தான் போகிறார்கள்.

அன்புடன்
Baappu